இந்த ஆண்டு ஆடம்பரம் இல்லாமல் மிகவும் சிறப்பான தீபாவளி கொண்டாட்டம்: திரு.ஹரிஸ் மோகன்

இந்த ஆண்டு ஆடம்பரம் இல்லாமல் மிகவும் சிறப்பான தீபாவளி கொண்டாட்டம்: திரு.ஹரிஸ் மோகன்

SIV_0001

இவ்வருட தீபாவளி கொண்டாட்டங்கள் பற்றிய தங்களது கருத்து என்ன என்று வினாவிய போது.. திரு.ஹரிஸ் மோகன் பிபிபி கட்சியின் தேசிய இளைஞர் பகுதி தலைவர் கூறியது.

இந்த வருட தீபாவளி மிகவும் சிறப்பாக நடந்தது. இன்னமும் தீபாவளி மூட்டோடுதான் சந்தோசமாக இருக்கிறோம். சற்று முன் ஜோகூர் மாநிலத்தில் ஒரு தீபாவளி நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டேன். மிகவும் சிறப்பாக பல இன மக்கள் கலந்துக் கொண்டனர்.
இந்த வருட தீபாவளி முந்தைய காலங்கள் போல் பல்வேறு குறைகளோடு அல்லாமல் மிகவும் சிறப்பாகவே கொண்டாப்பட்டது என்பதே எனது கருத்து. அதற்கு காரணம் அரசாங்கம் அத்தியவசிய பொருட்களின் விலையை கட்டுபாட்டுக்குள் வைத்ததோடு , கோழி இறைச்சி போன்ற பெருநாட்களில் பெரும் விலையேற்றம் காணும் சமையல் பொருட்களின் விலையையும் குறைத்ததுதான்.
அனைத்து கொண்டாட்டங்களும் ஆடம்பரம் இல்லாமல் மிகவும் சிக்கனமாகவே கொண்டாடப்பட்டது. பட்டாசு வெடித்தல் மிகவும் குறைவாகவே காணப்பட்டது. இதனால் பல்வேறு அசம்பாவித நிகழ்வுகளும் இல்லாமல் இருந்தது. எளிமையான கொண்டாட்டமே சிறந்ததாய் உள்ளது என ம.இ.கா தேசிய இளைஞர் பிரிவின் தலைவர் திரு.சிவாராஜ் சந்திரன் அவர்களின் திறந்த இல்ல உபரசரிப்பில் கலந்து சிறப்பித்த வேளையில் திரு.ஹரிஸ் மோகன் கூறினார்.

SIV_9985