அன்வார் வழக்கின் தீர்ப்பை மதிப்பளித்து ஏற்றுக்கொள்ள வேண்டும்: டாக்டர் மகாதீர்

அன்வார் வழக்கின் தீர்ப்பை மதிப்பளித்து ஏற்றுக்கொள்ள வேண்டும்: டாக்டர் மகாதீர்

anwar

பிப்ரவரி 10, எதிர்க்கட்சித் தலைவர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் மீதான இரண்டாவது ஓரினப் புணர்ச்சி வழக்கில் தீர்ப்பு இன்று வழங்கப்படவுள்ளது. மக்கள் அதனை ஏற்றுக்கொள்ள வேண்டும் என முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது கேட்டுக்கொண்டார்.

கடந்த 1998-ஆம் ஆண்டு துணைப்பிரதமராகவும், நிதியமைச்சராகவும் இருந்த டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிமை பதவியிலிருந்து நீக்கிய துன் டாக்டர் மகாதீர், இன்று நீதிமன்றம் வெளியிடும் எந்தவிதமான தீர்ப்பையும் மதிப்பளித்து ஏற்றுக்கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.