அன்வாருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டால் பக்காத்தான் மாபெரும் தலைவரை இழக்கும்

அன்வாருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டால் பக்காத்தான் மாபெரும் தலைவரை இழக்கும்

anwar

அக்டோபர் 27, மலேசிய அரசியல் வானில் ஒரு மகத்தான திருப்பத்தை ஏற்படுத்திய பக்காத்தான் கட்சிதலைவர் டத்தோ ஸ்ரீ அன்வர் குதப்புணர்ச்சி வழக்கில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டால் பக்காத்தான் கூட்டணியின் எதிர்காலம் ஒரு பேரிடரை சந்திக்கும் என்னும் பார்வை வலுத்துவருகின்றன.

தனக்கு விதிக்கப்பட்டுள்ள தண்டனையை எதிர்த்து அன்வார் செய்துள்ள மேல்முறையீட்டில் தனக்கு வெற்றி கிடைக்கும் என அவர் நம்பிக்கை தெரிவித்திருந்தாலும் கூட, அவர் குற்றவாளி என தீர்ப்பளித்து சிறைத்தண்டனை அளித்தால் பாக்காத்தான் கட்சி தனது மாபெரும் தலைவரை இழக்கும் சூழ்நிலை ஏற்படும் என கூறுகின்றன.