அடுத்த ஆண்டு பள்ளிக்கூட பஸ் கட்டணம் உயர்வு இல்லை

அடுத்த ஆண்டு பள்ளிக்கூட பஸ் கட்டணம் உயர்வு இல்லை

busfarehike

அக்டோபர் 27, அடுத்த ஆண்டு பள்ளிக்கூட பஸ் கட்டணத்தை கூட்டாக உயர்த்தும் திட்டத்தை கைவிட பள்ளிக்கூட பஸ் உரிமையாளர்கள் தீர்மானித்துள்ளனர்.

மலேசிய ஏகபோக ஒழிப்பு ஆணையம்(எம்ஒய்சிசி) எச்சரிக்கை விடுத்ததை அடுத்து அவர்கள் இம்முடிவை எடுத்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பான எம்ஒய்சிசி மற்றும் ஸ்பாட் எனப்படும் தரைவழி போக்குவரத்து கமிஷனின் முடிவை பள்ளிக்கூட பஸ் உரிமையாளர் மதிப்பதாக அதன் தலைவர் முகமட் ரோபிக் கூறினார்.