அக்டோபர் 8-ஆம் நாள் எரிபொருள் விலை-உயர்வை எதிர்க்கும் ஆர்ப்பாட்டம்

அக்டோபர்  8-ஆம்  நாள் எரிபொருள்  விலை-உயர்வை  எதிர்க்கும்  ஆர்ப்பாட்டம்

Suhaizan-Kaiat

எரிபொருள் விலை-உயர்வு எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் பாஸ் இளைஞர்களும் கலந்துகொள்வர்  என அதன்  தலைவர்  சுஹாய்சான்  காயாட் தெரிவித்தார் .
“பொதுமக்கள்  கிளர்ந்தெழுந்து  எரிபொருள்  விலை-உயர்வுக்கு  எதிர்ப்புத்  தெரிவிக்க  இதுவே  சரியான  தருணம். எண்ணெய்  உற்பத்தி  செய்யும்  நாட்டின்  குடிமக்கள்  என்ற  முறையில்  நாட்டின்  விளைபொருள்களை  அனுபவிக்கும்  உரிமை  அவர்களுக்கு  உண்டு. எரிபொருள்  விலை உயர்வால்  அவர்கள்  துன்புறக்கூடாது”, என்றாரவர்.பணவீக்கத்துக்கு  எதிரான  கூட்டமைப்பு  புதன்கிழமை அக்டோபர்  8-ஆம்  நாள்   நாடாளுமன்றத்துக்கு  வெளியில்  நடைபெறும் ஆர்ப்பாட்டத்துக்கு  ஏற்பாடு  செய்துள்ளது.