ஜெயலலிதா சொத்து குவிப்பு காலை 11 மணிக்கு தீர்ப்பு

ஜெயலலிதா சொத்து குவிப்பு காலை 11 மணிக்கு தீர்ப்பு

jaya

மே 11, தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துகுவிப்பு வழக்கு மேல்முறையீட்டு மனு மீது கர்நாடக உயர்நீதிமன்றம் இன்று காலை 11 மணிக்கு தீர்ப்பு வழங்குகிறது. இதையொட்டி, கர்நாடக உயர்நீதிமன்ற வளாகத்தை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் மாநகர போலீசார் கொண்டு வந்துள்ளனர். மேலும் பாதுகாப்புக்காக ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் பாதுகாப்பு பணியில் 10 கம்பெனி கே.எஸ்.ஆர்.பி, 3 டிசிபி, 5 ஏசிபி, 20 இன்ஸ்பெக்டர்கள், 500 சிவில் போலீசார் உள்பட ஆயிரம் போலீசார் ஈடுபடுகின்றனர்.