அரியானாவில் பா.ஜ.க.விற்க்கு வாக்கு சேகரித்தார் அமித் ஷா

அரியானாவில் பா.ஜ.க.விற்க்கு வாக்கு சேகரித்தார் அமித் ஷா

5

அரியானா மாநிலத்தில் அக்டோபர் மாதம் 15-தேதி சட்டசபை தேர்தல் நடக்க இருக்கிறது.அதனையொட்டி பல்வேறு கட்சிகள் வாக்கு சேகரிக்க தொடங்கி உள்ளது. பா.ஜ.க.சார்பில் ஏற்பாடு செய்திருந்த பிரமாண்ட பேரணியில் பேசிய பா.ஜ.க. தலைவர் அமித் ஷா கூறியதாவது. அரியானாவில் நல்ல மாற்றம் வரவேண்டும் என்றால் நீங்கள் பாரதீய ஜனதா கட்சிக்கு வாக்கு அளிக்க வேண்டும் என்று மக்களை பார்த்து கேட்டுக்கொண்டார். பிரதமர் நரேந்திரமோடி வழியை பின்பற்றி அமித் ஷா தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கும் முன் பாரத் மாதா கி ஜெய் என்று தனது முழக்கதுடன் தனது உரையை தொடங்கினார். மேலும் அரியானாவில் பாரதீய ஜனதா ஆட்சிக்கு வந்தால் அரியானா மாநிலம் வளர்ச்சி பாதை அடைவது உறுதி என்று குறிப்பிட்டார்.