காஷ்மீர் துயரத்திற்கு நிதி உதவி வழங்க வேண்டுமா!!…

காஷ்மீர் துயரத்திற்கு நிதி உதவி வழங்க வேண்டுமா!!...

4

காஷ்மீர்க்கு பல பகுதிகளிலும் இருந்து உதவிகள் வந்து கொண்டிருக்கின்றன. அந்த மக்களுக்கு ஏற்பட்டுள்ள பேரிழப்பை மதிப்பிட்டால், அவர்கள் இயல்பு வாழ்கைக்குத் திரும்ப மென்மேலும் நிதியுதவியும், பொருளுதவியும் தேவைப்படுகின்றன. இந்த தேசியப் பணியில், நீங்கள் எளிதில் பங்கேற்கும் வகையில், “தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’ குழுமத்தின் சார்பில் ரூ.2.50 லட்சத்தை தொடக்க நிதியாக வழங்கி, “தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் காஷ்மீர் நிவாரண நிதி’யைத் தொடங்கியுள்ளோம். இதில் கீழ்க்காணும் 3 வழிமுறைகளில் ஒன்றின் மூலம் உங்கள் பங்களிப்பை வழங்கலாம்.

‘THE NEW INDIAN EXPRESS KASHMIR RELIEF FUND’ என்ற பெயரில், நிதிக்கான காசோலைகளை, நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் ஏதாவதொரு பதிப்பு மைய அலுவலகத்தில் வழங்கலாம். ரொக்கப் பணமாக வழங்க விரும்புவோர், நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் ஏதாவதொரு அலுவலகத்தில் வழங்கி, அதற்கான ரசீதை உடனடியாக பெற்றுக் கொள்ளலாம். ஆன்லைன் மூலம் நிதியளிக்க விரும்புபவர்கள், ‘THE NEW INDIAN EXPRESS KASHMIR RELIEF FUND’ என்ற பெயரில் இந்தியன் வங்கியில் உள்ள நடப்புக் கணக்கு எண்.6260119197-இல் நேரடியாகச் செலுத்தலாம். வங்கிக்கான SWIFT-CODE: IDIBINBBPAD. IFSC CODE: IDIB000P001.
ஆன்லைனில் பணம் செலுத்தியவர்கள், அதுதொடர்பான விவரங்களை, kashmirrelieffund@newindianexpress.com-க்கு அனுப்பலாம்.