மீன் பிடிக்கச் சென்ற மீனவர் கடலில் மூழ்கி பலி

மீன் பிடிக்கச் சென்ற மீனவர் கடலில் மூழ்கி பலி

5

 

கர்நாடக கடல் பகுதியில் மீன் பிடிக்கச் சென்ற குமரி மீனவர் படகில் இருந்து தவறி விழுந்து பலியானார்.குமரி மாவட்டம் அழிக்காலை சேர்ந்தவர் ஆண்ட்ரோஸ் மகன் குமார் (27). இவர் கர்நாடாக மாநிலம் மங்கலாபுரம் கடற்கரையில் தங்கியிருந்து மீன்பிடித் தொழில் செய்து வந்தார்.கடந்த 18–ந் தேதி கடலுக்கு மீன் பிடிக்க சென்ற போது படகில் தவறி விழுந்து காயமடைந்தார். மீனவர்கள் அவரை மீட்டு கார்வார் துறைமுகத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். மேல் சிகிச்சைக்காக கோவாவுக்கு கொண்டு செல்லப்பட்டார். வியாழனன்று அங்கு சிகிச்சை பலனின்றி குமார் இறந்தார். இது பற்றிய தகவல் அழிகாலில் உள்ள அவரது பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கு தெரிவிக்கப்பட்டது.