அசாமில் ராணுவம் மீது குண்டு வீசி தீவிரவாதிகள் தாக்குதல்.

அசாமில் ராணுவம் மீது குண்டு வீசி  தீவிரவாதிகள் தாக்குதல்.

4

அசாம் மாநிலம் சிப்சாகர் மாவட்டத்தில் உள்ள கெர்பாரி என்ற இடத்தில் ராணுவ வீரர்கள் இன்று காலை சென்று கொண்டிருந்தனர். தேயிலை தோட்டங்களில் பதுங்கியிருந்து உல்பா தீவிரவாதிகள்  வெடிகுண்டு தாக்குதலை நடத்தினர். இந்த தாக்குதலில் ஒரு ராணுவ ஜவான் படுகாயம் அடைந்தார். ராணுவ வாகனமும் இந்த தாக்குதலில் சேதம் அடைந்தது.