என் தமிழ்

48வது திருமுறை விழா நிறைவு : இளைய தலைமுறையிடம் சைவ மரபை வளர்க்கும் முயற்சி பாராட்டு

சிலாங்கூர், 03 ஆகஸ்ட் 2026 : மலேசிய இந்து சங்கம் (Malaysia Hindu Sangam) சிலாங்கூர் மாநிலக் கவுன்சில் ஏற்பாடு செய்த 48வது திருமுறை விழா (Thirumurai Vizha 2026) நிறைவு மற்றும் பரிசளிப்பு விழா, பண்டார் சௌஜானா புத்ராவில் உள்ள மக்சா (MAHSA) பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மனிதவள அமைச்சர் டத்தோ ஸ்ரீ ராமணன் ராமகிருஷ்ணன், கடந்த 48 ஆண்டுகளாக இடையறாது நடைபெற்று வரும் இந்த விழா, திருமுறை மரபைப் பாதுகாப்பதோடு, இளைய தலைமுறையினரிடம் நல்லொழுக்கம், பண்பாடு மற்றும் சமயப் பற்றை வளர்க்கும் முக்கிய முயற்சியாக திகழ்கிறது என்று பாராட்டினார்.

போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்கள், பங்கேற்பாளர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்திய ஏற்பாட்டாளர்களுக்கு அவர் வாழ்த்து தெரிவித்தார். இத்தகைய முயற்சிகள் தமிழர் சமய மற்றும் பண்பாட்டு மரபுகளைப் பாதுகாப்பதோடு, சமூகத்தில் நல்லிணக்கம் மற்றும் ஒற்றுமையை வலுப்படுத்துவதிலும் முக்கிய பங்காற்றுகின்றன என்றார்.

சமய மற்றும் கலாசார விழாக்கள் மூலம் இளம் தலைமுறையினருக்கு பாரம்பரிய விழுமியங்களை அறிமுகப்படுத்தும் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும், சிலாங்கூரில் பல இன மக்களிடையே நல்லிணக்கத்தை வலுப்படுத்த இத்தகைய நிகழ்ச்சிகள் தொடர்ந்து ஊக்குவிக்கப்பட வேண்டும் என்றும் ராமணன் ராமகிருஷ்ணன் வலியுறுத்தினார்.

Scroll to Top