மலேசியாவில் அஞ்சான் பிரிமீயர் ஷோ: சூர்யா, வித்யூத் ஜம்வால் பங்கேற்பு

மலேசியாவில் அஞ்சான் பிரிமீயர் ஷோ: சூர்யா, வித்யூத் ஜம்வால் பங்கேற்பு

0 (1)

சூர்யா-சமந்தா நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புடன் உருவாகியுள்ள ‘அஞ்சான்’ படம் நாளை உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது. லிங்குசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம் தமிழில் ‘அஞ்சான்’ என்ற பெயரிலும், தெலுங்கில் ‘சிகந்தர்’ என்ற பெயரிலும் ஒரே நேரத்தில் வெளியிடப்படுகிறது.

வெளிநாடுகளிலும் பல்வேறு திரையரங்குகளில் இப்படம் வெளியிடப்படுகிறது. அதன்படி, இன்று மலேசியாவில் இப்படம் திரையிடப்படுகிறது. இதற்கான பிரிமீயர் ஷோவில் கலந்துகொள்வதற்காக அஞ்சான் படக்குழுவினர் மலேசியா புறப்பட்டு செல்கின்றனர்.

சூர்யா, வித்யூத் ஜம்வால், இயக்குனர் லிங்குசாமி, வசனகர்த்தா பிருந்தா சாரதி உள்ளிட்டோர் மலேசியாவில் பிரத்யேகமாக திரையிடப்படும் ‘அஞ்சான்’ படத்தின் பிரிமீயர் ஷோவில் கலந்துகொண்டு சிறப்பிக்கவிருக்கின்றனர்.

பலத்த எதிர்பார்ப்புடன் வெளிவரும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார். யுடிவி நிறுவனமும், லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனமும் இணைந்து பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது.

இப்படத்தில் இடம்பெறும் ஒரு பாடலை சூர்யா தனது சொந்த குரலில் பாடியுள்ளார். இந்த பாடல் அனைவர் மத்தியிலும் பலத்த வரவேற்பை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.