சென்னை தலைமைச் செயலகத்தில் வெடிகுண்டு?

சென்னை தலைமைச் செயலகத்தில் வெடிகுண்டு?

SECRETARIAT_33331fசென்னை: தலைமைச் செயலகத்தில் மின் அலங்காரம் செய்யப்பட்ட தென்னை மரத்தில் வெடிபொருள் இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. சுதந்திர தினம் நாளை கொண்டாடப்படுவதையொட்டி சென்னை தலைமைச்செயலகம் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இதன் ஒருபகுதியாக ஒளிரும் செயற்கை தென்னைமரம் தலைமைச்செயலக வாயில் முன் வைக்கப்பட்டுள்ளது. தென்னை மரத்தை சோதித்த போது வெடி பொருள் இருப்பதாக சோதனை கருவியில் காட்டியது. இதனையடுத்து உஷாரடைந்த வெடிகுண்டு நிபுணர்கள் நவீன கருவி கொண்டு சோதனையிட முடிவு செய்துள்ளனர்.