உலகம்மலேசியா

‘ஐசிஜெ’ பொது விசாரணை அமர்வில் மலேசியாவும் பங்கேற்கும்

கோலாலம்பூர், 27/04/2025 : வரும் திங்கட்கிழமை தொடங்கி நெதர்லாந்து, தி ஹேக்கில் நடைபெறவிருக்கும் பாலஸ்தீனம் குறித்த அனைத்துலக நீதிமன்றம் ஐசிஜெயின் ஆலோசனை மற்றும் கருத்து பகிர்வு நடவடிக்கைகளுக்கான பொது விசாரணை கூட்டத்தில் மலேசியாவும் பங்கேற்கும்.

ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனத்திலும் அதன் தொடர்பிலும் ஐக்கிய நாடுகள் அமைப்பு, பிற அனைத்துலக அமைப்புகள், மூன்றாம் நாடுகளின் நிலைத்தன்மை மற்றும் அதன் செயல்பாடுகள் குறித்த இஸ்ரேலின் கடப்பாடுகளை உள்ளடக்கி இக்கூட்டம் இருக்கும்.

பிரதமர் துறையின் சட்ட விவகாரப் பிரிவு, தேசிய சட்டத்துறை மற்றும் ஹேக்கில் உள்ள மலேசிய தூதரகம் ஆகியவற்றின் மூத்த அதிகாரிகளுடன் இணைந்து மலேசிய பேராளார் குழுவைப் பிரதமர் துறையின் சட்ட மற்றும் கழக சீர்திருத்தங்களுக்கான அமைச்சர் டத்தோ ஶ்ரீ அசாலினா ஒத்மான் சைட் வழிநடத்துவார் என்று வெளியுறவு அமைச்சு இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் குறிப்பிட்டது.

மலேசிய நேரப்படி ஏப்ரல் 28ஆம் தேதி இரவு மணி 11.00-க்கு டத்தோஸ்ரீ அசாலினா தேசிய அறிக்கையை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

2004 மற்றும் 2024-ஆம் ஆண்டுகளில் பங்கேற்றப் பிறகு, பாலஸ்தீனம் தொடர்பான ‘ஐசிஜெ’ ஆலோசனைக் கருத்து நடவடிக்கைகளில் மலேசியா பங்கேற்பது இது மூன்றாவது முறையாகும்.

இக்கூட்டம், இஸ்ரேலின் சட்டப்பூர்வ பொறுப்புகள், அந்நாட்டில் அதன் நிலைத்தன்மை மற்றும் நடவடிக்கைகள் ஆகியவற்றுடன் ஐக்கிய நாடுகள் அமைப்பு, அனைத்துலக அமைப்புகள், மூன்றாம் நாடுகள் ஆகிவற்றுக்கான தாக்கங்கள் குறித்த கருத்து பரிமாற்றத்தையும் நோக்கமாகக் கொண்டதாகும்.

இதனிடையே, 1967-ஆம் ஆண்டுக்கு முந்தைய எல்லைகளான கிழக்கு ஜெருசலேமை தலைநகராகக் கொண்டு சுதந்திரமான மற்றும் இறையாண்மை கொண்ட பாலஸ்தீன அரசை உருவாக்குவதில் அந்நாட்டு மக்களின் போராட்டத்திற்கு மலேசியா தொடர்ந்து ஆதரவளிக்கும் என்று வெளியுறவு அமைச்சு முன்னதாக தெரிவித்திருந்தது.

Source : Bernama

#PalestineMalaysia
#MalaysiaNews
#MalaysianNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
#MalaysianTamilNews