மலேசியாவட்டாரச் செய்திகள்

24 மணி நேரத்திற்குள் அன்றாட பணியைத் தொடங்கினார் டாக்டர் முஹமட் யுஸ்ரி

தாப்பா, 27/04/2025 : ஆயர் கூனிங் சட்டமன்ற இடைத்தேர்தலில் தேசிய முன்னணி சார்பில் போட்டியிட்ட டாக்டர் முஹமட் யுஸ்ரி பக்கிர், தேர்தல் முடிந்த அடுத்த 24 மணி நேரத்திற்குள் தமது அன்றாட பணியைத் தொடங்கி விட்டார்.

அதிகாலை தொடங்கி பல்வேறு நிலைகளைச் சேர்ந்த மக்கள் அப்பகுதியில் சூழ்ந்திருந்தது உட்பட மறைந்த முன்னாள் ஆயர் கூனிங் சட்டமன்ற உறுப்பினர் இஷாம் ஷாருடின் உதவி செய்த முதியோர் இல்லத்தைப் புதுப்பிக்கும் திட்டத்தைப் பார்வையிடுவதையும் காண முடிந்தது.

கம்போங் ஜவாவில் உள்ள முஹமட் மன்சோருக்குச் சொந்தமான இந்த வீடு, மறைந்த இஷாம்மிற்கு மிகுந்த கவலையை ஏற்படுத்தியதுடன், தாம் உயிருடன் இருந்த காலத்தில் இருமுறை அங்கு சென்று பார்வையிட்டுள்ளார்.

1960-களில் கட்டப்பட்ட இவ்வீட்டின் சமையலறைப் பகுதி, காலப்போக்கில் பழமையடைந்து வருகின்றது.

இவ்வீட்டில், இஷாம்மின் மூன்றாவது மகளான, 60 வயதுடைய சரினா முஹமட் மன்சோருடன் வசதியற்ற சூழ்நிலையில் வசித்து வரும் நிலையில், சில வாரங்களில் மேற்கொள்ளவிருக்கும் புதுப்பித்தல் திட்டத்தின் மூலம் அதற்கு நிவர்த்தி கிடைக்கு என்று நம்ப்படுகின்றது.

“கூரை சம்பந்தப்பட்டது. விண்ணப்பத்தின் போது பதிவு செய்யப்பட்ட ஜன்னல்களின் தேவைகள் அடிப்படையிலானது”, என்று ஆயர் கூனிங் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் முஹமட் யுஸ்ரி பக்கிர் கூறினார்.

பேராக், தப்பாவில் உள்ள Giat Mara உதவியின் மூலம் புதுப்பித்தல் திட்டம் நாளை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதனிடையே, இத்திட்டத்தைத் தவிர்த்து, இஷாம் வாழ்ந்த காலத்தில் தொடர் கண்காணிப்பு தேவைப்பட்ட பிற திட்டங்களின் பட்டியலையும் தாம் வைத்திருப்பதாக, டாக்டர் முஹமட் யுஸ்ரி கூறினார்.

Source : Bernama

#AyerKuningByElections
#MalaysiaNews
#MalaysianNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
#MalaysianTamilNews