மலேசியாவட்டாரச் செய்திகள்

ஆயர் கூனிங்; தேசிய முன்னணியின் வாக்குகள் வாக்காளர்களின் இயல்பைப் பிரதிபலிக்கின்றது

தாப்பா, 27/04/2025 : நேற்று நடைபெற்ற ஆயர் கூனிங் சட்டமன்ற இடைத்தேர்தலில் தேசிய முன்னணி வேட்பாளர் அதிக பெரும்பான்மை வாக்குகளில் வெற்றி பெற்றது, அமைதியை விரும்பும், சினத்தைப் புறக்கணிக்கும், சண்டை மற்றும் அவதூறுகளை நிராகரிக்கும், அப்பகுதி வாக்காளர்களின் இயல்பைப் பிரதிபலிப்பதாக, பேராக் மாநில தேசிய முன்னணி தலைவர் டத்தோ ஶ்ரீ சரானி முஹமட் தெரிவித்தார்.

தேர்தல் பிரச்சாரத்தின் போது மட்டும் கலந்து கொண்ட வெளிதரப்பினரின் அரசியலையும் வாக்காளர்கள் வெற்றிகரமாக நிராகரித்ததைக் காண முடிந்ததாக அம்மாநில மந்திரி புசாருமான அவர் கூறினார்.

“வெளியிருந்து வருபவர்கள் விரும்பியதைப் பேசி, ஆயர் கூனிங் வாக்காளர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தினர். பி.ஆர்.கே தேர்தல் முடிந்ததும் அவர்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு திரும்பி விட்டனர். சற்றுமுன்பு பார்த்தது போல, பி.என் பெற்ற வாக்குகள் கூட 6,812-யிலிருந்து 6,059-க்கு குறைந்து விட்டது. இளைஞர்களின் பங்கேற்பு முன்னேற்றம் அடைந்துள்ளதைக் காண எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது”,என்று அவர் கூறினார்.

ஆயர் கூனிங் சட்டமன்ற இடைத்தேர்தலில் வாக்களித்த 31,897 வாக்காளர்களில்,14,000 பேர் 18 முதல் 39 வயதுக்குட்பட்ட இளைஞர்களாவர்.

15-ஆவது பொதுத் தேர்தலில் இத்தொகுதியில் நடைபெற்ற ஐந்து முனைப் போட்டியில் மறைந்த இஷாம் ஷாருடின் 2,213 வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி பெற்றார்.

Source : Bernama

#AyerKuningByElections
#MalaysiaNews
#MalaysianNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
#MalaysianTamilNews