என் தமிழ்

சீனப் புத்தாண்டு: ஜோகூர் மாநிலத்திற்கு நுழையும் வாகனங்களின் எண்ணிக்கை 10 முதல் 15% அதிகரிக்கும்

ஜோகூர் பாரு, 27/01/2025 : சீனப் புத்தாண்டை முன்னிட்டு, ஜோகூர் பாலம் மற்றும் இரண்டாவது இணைப்புப் பாலம் வழி ஜோகூர் மாநிலத்திற்கு நுழையும் வாகனங்களின் எண்ணிக்கை 10 முதல் 15 விழுக்காட்டு அதிகரிக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இந்த அதிகரிப்பின் மூலம் அனைத்து தரைவழிப் பாதைகளிலிருந்தும் சுமார் ஒரு லட்சம் வாகனங்கள் மாநிலத்திற்குள் நுழையலாம் என்று ஜோகூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ எம்.குமார் தெரிவித்தார்.

”ஜோகூர் ஏன் தனித்துவமானது? நெடுஞ்சாலையில் அதிகரிக்கும் வாகனங்களைத் தவிர, BSI மற்றும் KSAB இரண்டு நுழைவாயில்களில் அதிகரிக்கும் வாகனங்களின் எண்ணிக்கையில் நாங்கள் கவனம் செலுத்துகிறோம். மக்கள் உள்ளேயும் வெளியேயும் பயணிப்பார்கள். எனவே பணி விரிவானதாக இருக்கும்”, என்று அவர் கூறினார்.

திங்கட்கிழமை, சீனப்புத்தாண்டை முன்னிட்டு கெம்பாஸ் டோல் சாவடியில் நடைபெற்ற Op Selamat நடவடிக்கையின் தொடக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர், குமார் அவ்வாறு கூறினார்.

போக்குவரத்து நெரிசல் ஏற்படும் 49 இடங்களையும், விபத்துக்கள் நிகழும் 31 இடங்களையும் தமது தரப்பு அடையாளம் கண்டுள்ளதாகவும், பண்டிகை காலத்தில் அவ்விடங்களில் கவனம் செலுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

Source : Bernama

#ChineseNewYear2025
#johor
#Entamizh
#MalaysiaNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia