“மக்கள் பணிச் செம்மல்” விருது பெற்றார் மாண்புமிகு டத்தோ ஸ்ரீ டாக்டர் எம்.சரவணன்.

"மக்கள் பணிச் செம்மல்" விருது பெற்றார் மாண்புமிகு டத்தோ ஸ்ரீ டாக்டர் எம்.சரவணன்.

பத்துமலை, 28/09/2024 : தருமபுர ஆதீனம் 27 ஆவது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி, தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் ஆசியுரையோடு பக்திமனம் கமழ முதல் உலக சைவ நன்னெறி மாநாடு இன்று 28/09/2024 பத்துமலை அருள்மிகு வேலாயுத சுவாமி ஆலய வளாகத்தில் நடைபெற்றது.

தாப்பா நாடாளுமன்ற உறுப்பினரும் ம.இ.கா தேசியத் துணைத் தலைவருமான மாண்புமிகு டத்தோ ஸ்ரீ டாக்டர் எம். சரவணன் அவர்களும், அருள்மிகு மகா மாரியம்மன் தேவஸ்தான தலைவர் தான் ஸ்ரீ நடராஜா அவர்களும், தருமை ஆதீனப் புலவர் மரபின் மைந்தன் முத்தையா அவர்களும், முனைவர் இரா செல்வநாயகம் அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக சமய உரையாற்றவிருக்கிறார்கள்.

இந்த முதலாவது உலக சைவ நன்னெறி மாநாட்டில் தருமபுர ஆதீனம் 27 ஆவது குரு மகா சன்னிதானம்  ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி, தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் அவர்களின் திருக்கரங்களால் “மக்கள் பணிச் செம்மல்” விருது பெற்றார் மாண்புமிகு டத்தோ ஸ்ரீ டாக்டர் எம்.சரவணன். அவருக்கு நமது வாழ்த்துக்கள்.

#MalaysiaNews
#LatestNews
#Malaysia
#DatukSeriMSaravanan

Comments are closed, but trackbacks and pingbacks are open.