கோலாலம்பூர், 28/09/2024 : அமரன் திரைப்படத்தின் விளம்பரத்திற்காக நடிகர்கள் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி மற்றும் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் ஆகியோர் 28/09/2024 அன்று மலேசியா வந்திருந்தனர். மலேசியாவில் அமரன் திரைப்படத்தை வெளியீடு செய்யும் DMY கிரியேஷன் நிறுவனம் சிலாங்கூர், ரவாங்கில் உள்ள அங்குன் சிட்டி மாலில் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சி மற்றும் பத்திரிக்கையாளர் சந்திப்பில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி ராஜ்குமார் பெரியசாமி மற்றும் ஜி.வி.பிரகாஷ் கலந்து கொண்டனர்.
ரசிகர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் கூடியிருந்த இருந்த இந்த நிகழ்ச்சியில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி, ராஜ்குமார் மற்றும் ஜி.வி.பிரகாஷ் திரைப்படம் குறித்து உரையாற்றினர். மலேசிய மக்களின் அன்பிற்கும் ஆதரவிற்கும் தனது நன்றியை சிவகார்த்திகேயன் தெரிவித்துக் கொண்டார்.
சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் இசையில் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் மற்றும் சோனி பிக்சர்ஸ் பிலிம்ஸ் இந்தியா தயாரிப்பில் உருவாகி 2024 தீபாவளிக்கு 31 அக்டோபர் 2024 அன்று உலகமெங்கும் திரைக்கு வர இருக்கின்ற திரைப்படம் அமரன். மறைந்த இராணுவ மேஜர் முகுந்த் வரதராஜன் அவர்களின் வாழ்க்கையை தழுவி எடுப்பட்டுள்ள அமரன் திரைப்படம் சிவகார்த்திகேயன் திரைப் பயணத்தில் மிக முக்கிய படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் சிவகார்த்திகேயன் சாய் பல்லவி முதல் முறையாக ஜோடி சேருவதால் இந்த திரைப்படம் ரசிகர்களிடையே மேலும் எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது.
#Amaran
#Sivakarthikeyan
#SaiPallavi
#GVPrakash
#RajKamalFilms
#SonyPictures
#DMYCreation
#Kollywood
#Entamizh
#MalaysiaNews
#LatestNews
#Malaysia
Comments are closed, but trackbacks and pingbacks are open.