பாரா தேக்வாண்டோ விளையாட்டு அறிமுக விழா 2024

பாரா தேக்வாண்டோ விளையாட்டு அறிமுக விழா 2024

புக்கிட் ஜாலில், 12/09/2024 : பாரா தேக்வாண்டோ விளையாட்டு அறிமுக நிகழ்ச்சி 11 செப்டம்பர் 2024 அன்று புக்கிட் ஜலீல் தேசிய விளையாட்டு மையத்தில் நடைபெற்றது.

மலேசிய தேக்வாண்டோ சங்கத்தின் கீழ் உள்ள மாநில தேக்வாண்டோ சங்கம் மற்றும் பிரீமியர் கிளப்களுடன் இணைந்து இவ்விளையாட்டை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி முதல் முறையாக நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 8 புதிய விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர். இந்த விளையாட்டில் மேலும் புதிய திறமைகளை கண்டறிய ஜேபிஎஸ்எனுடன் இணைந்து தேக்வாண்டோ சங்கங்கள் மற்றும் மாநில பயிற்சியாளர்கள் பணியாற்ற முடியும் அது மட்டுமின்றி எதிர்காலத்தில் நாட்டின் பதக்க பட்டியலில் பாரா தெக்வாண்டோ வீரர்கள் கண்டிப்பாக இடம் பிடிக்க முடியுமென மலேசிய தேக்வாண்டோ சங்கம் நம்புகிறது.