செமினி தோட்ட தமிழ் பள்ளி மாண்வர்கள் 2 தங்கம் வென்றனர்.

செமினி தோட்ட தமிழ் பள்ளி  மாண்வர்கள் 2 தங்கம் வென்றனர்.

பாலி இந்தோனேசியா, 05/09/2024 : இந்தோனேசியா பாலியில் நடைபெற்ற அனைத்துலக அறிவியல் புத்தாக்கப் போட்டியில் செமினி தோட்ட தமிழ்ப் பள்ளி மாணவர்கள் 2 தங்கப் பதக்கங்களும் 2 வெள்ளிப் பதக்கங்களும் பெற்று வெற்றி வாகை சூடியுள்ளனர். மேலும், சிறந்த படைப்புக்கான விருதையும் வென்று பள்ளிக்கும் நாட்டிற்கும் பெருமை சேர்த்தனர்.

இப்போட்டிக்கு உறுதுணையாக இருந்த ஆசிரியர்கள் திருமதி ஷாமினி, திருமதி உமாதேவி, திருமதி தமிழரசி, திருமதி வினோதினி,மற்றும் திரு விஜயன்.

மாணவர்கள் ஜெகன் ரூபன், கார்த்திகேயன், தர்ஷிகா, சிதேஷ், கிஷோர், முகேஷ், சன்மித்தா, வேதா ஸ்ரீ, தாமிரா, லக்ஷன், ஈஸ்வரன், லோகேன் ராஜ் ஆகியோர் செமினி தமிழ்ப் பள்ளியின் சார்பில் பங்கேற்று பள்ளியின் நற்பெயரை சர்வதேச அளவில் பெருமை சேர்த்துள்ளனர்.