பாராலிம்பிக்ஸில் இந்தியா 20 பதக்கங்களை வென்று சாதனை

பாராலிம்பிக்ஸில் இந்தியா 20 பதக்கங்களை வென்று சாதனை

பாராலிம்பிக்ஸில் நேற்று (03.09.2024) இந்தியாவிற்கு மற்றுமொரு பொன்னாள். நேற்றும் மெடல் மழை பொழிந்தனர் இந்திய விளையாட்டு வீரர்கள்

உயரம் தாண்டுதலில் வெள்ளிப்பதக்கம் வென்று சாதனை படைத்தார் சரத்குமார்.

அதே போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு வெண்கலப்பதக்கம் வென்று சாதனை படைத்தார். இதன் மூலம் 3 ஒலிம்பிக் போட்டிகளிலும் பதக்கம் வென்ற ஒரே வீரர் எனும் சாதனையைப் படைத்திருக்கிறார் மாரியப்பன்.

400 மீ ஓட்டத்தில் வெண்கலப் பதக்கம் வென்றார் தீப்தி ஜிவான்ஜி.

ஈட்டி எறிதலில் இரண்டு பதக்கங்கள் கிடைத்தது. இந்த முறை அஜீத்சிங் வெள்ளிப் பதக்கம் வென்றார். சுந்தர் சிங் கர்ஜார் வெண்கல பதக்கம் வென்றார்.

துப்பாக்கி சுடுதல் போட்டியில் மற்றுமொரு பிரிவில் இறுதிப் போட்டியில் கலந்து கொண்ட ஆவ்னி லெஹாரா 5வது இடத்தைப் பிடித்தார்.

வில்வித்தைப் போட்டியில் காலிறுதியில் தோல்வியை தழுவினார் பூஜா.

வட்டு எறிதல் இறுதிப் போட்டியில் பாக்யஸ்ரீ ஜாதவ் 5வது இடத்தைப் பிடிக்க முடிந்தது.

மொத்தமாக இந்தியா 20 பதக்கங்களை வென்று சாதனை படைத்திருக்கிறது.