சங்கநாத இணைய வானொலி 3ம் ஆண்டு துவக்கம் மற்றும் விருது விழா

சங்கநாத இணைய வானொலி 3ம் ஆண்டு துவக்கம் மற்றும் விருது விழா

சென்னை, 30/08/2024 : உலக தமிழ் கலை மற்றும் பண்பாட்டு கலைக்கூடத்தின் ஏற்பாட்டில் சங்கநாத இணைய வானொலி 3ம் ஆண்டு துவக்க விழாவும் பல்வேறு துறையைச் சார்ந்த கலைஞர்களுக்கு விருது வழங்கும் வைபவமும் கடந்த 23 ஆம் திகதியன்று சென்னை தியாகராய மண்டபத்தில் வெகு விமர்சையாக நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் பல நாடுகளிலிருந்து பல கலைஞர்கள் கலந்து சிறப்பித்தார்கள். இதில் இலங்கை கல்வி இராஜாங்க அமைச்சர் அருணாச்சலம் அரவிந்த குமார் மற்றும் மலையகம் ஹட்டனைச் சேர்ந்த பாடகர் சலீம், மலையக பாடகி தனுஷா, பாடகி நளிரா பர்வின் மற்றும் வசந்தம் தொலைகாட்சி நிகழ்ச்சி தயாரிப்பாளர் தினேஷ் சுந்தர், உலக கலை பண்பாட்டுக் கலைக்கூடத்தின் இலங்கை ஒருங்கிணைப்பாளர் ஷாமிலா ஜெயினுள் இந்தியாவின் பிரபலங்கள் பிரபல பின்னணி பாடகி, சுனந்தா, இசைப்புயல் A.R. ரஹ்மானின் சகோதரியும் இசை அமைப்பாளர் மற்றும் பாடகி A.R.ரைஹாண, பாடகி பொப் ஷாலினி, நடிகர் மற்றும் இயக்குநர் அனுமோன், நடிகர் மற்றும் தயாரிப்பாளர் காதல் சுகுமார், மலேசியா உலக அழகி பிரியா ராமசாமி மற்றும் இந்தியாவின் பிரபல நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாநில செயலாளர்கள் கலந்து சிறப்பித்தார்கள்.

நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் சங்கநாத செம்மல் இணைய வானொலி மற்றும் உலக கலை பண்பாட்டுக் கலைகூடத்தின் தலைவர் டாக்டர் எஸ்.எம் ரஷ்மி ரூமி.அவர்கள்.