காஷ்மீரில் துப்பாக்கிச்சண்டை : 2 வீரர்கள் பலி

காஷ்மீரில் துப்பாக்கிச்சண்டை :  2 வீரர்கள் பலி

காஷ்மீரில் கோகர்னாக் பகுதியில் பயங்கரவாதிகளின் நடமாட்டம் இருப்பதாக ராணுவப்படைக்கு ரகசிய தகவல்கள் வந்த நிலையில், அந்த பகுதியை சுற்றி படைகள் குவிக்கப்பட்டன . அங்குள்ள ஆலன் ககரமாண்டு என்ற காட்டுப்பகுதியில் வீரர்கள் முன்னேறிய போது, பயங்கரவாதிகள் அவர்களை தாக்கினர். இதில் 2 ராணுவ வீரர்கள் பலியாகினர். மேலும் 3 வீரர்கள் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.