பகாங் ம.இ.கா 78 வது பேராளர் மாநாடு

பகாங் ம.இ.கா 78 வது பேராளர் மாநாடு

பகாங் மாநில ம.இ.காவின் 78ஆவது பேராளர் மாநாட்டைக் கட்சியின் தேசியத் தலைவர் சார்பாக இன்று 11/08/2024 ம.இ.கா தேசிய துணைத் தலைவரும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோ ஸ்ரீ M.சரவணன் அவர்கள் தொடக்கி வைத்து உரையாற்றினார்.

அவரது உரையில் இருந்து

பெந்தோங்கில் உறுப்பினர்களின் பேராதரவோடு மாநாடு சிறப்பாக நடைபெற்றது. ம.இ.கா வலுவான கட்சி என்பதை ஒவ்வொரு காலகட்டத்திலும் நாம் நிரூபித்து வருகிறோம்.

தலைவர் என்பது பெயர், தலைமைத்துவம் என்பது செயல். இன்றைக்கு துன் சாமிவேலு அவர்களுக்குப் பின் ம.இ.காவில் சரியான தலைமைத்துவத்தைக் கொண்டிருக்கிறோம். தான் ஸ்ரீ விக்னேஸ்வரன் அவர்களின் தலைமையில் கட்சி சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறது. கிளைகளை வலுப்படுத்தி கட்சியைப் பலமான கட்சியாக உருவாக்கும் பொறுப்பு நமக்கு இருக்கிறது.

இன்றைக்கு இந்திய சமுதாயம், குடும்பத்தில் ஒரு பட்டதாரி எனும் நிலையைத் தாண்டி, ஒவ்வொரு குடும்பத்திலும் நிபுணர்களை உருவாக்கும் இலக்கை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கிறது. அவர்களுக்குக் கை கொடுக்கும் இடத்தில் நாம் இருக்கிறோம் என்பதைப் புரிய வைத்து கட்சியை வலுப்படுத்துவோம்.

#MIC
#MICPahang
#DSMS
#AhliParlimenTapah
#TimbalanPresidenMIC