MH17 சுட்டு வீழ்த்தியவர்கள் நீதியின் முன் நிறுத்தப்படுவது உறுதி: ரஷ்யா அதிபர்

MH17 சுட்டு வீழ்த்தியவர்கள் நீதியின் முன் நிறுத்தப்படுவது உறுதி: ரஷ்யா அதிபர்

vladimir-putin

நவம்பர் 11, கடந்த ஜூலை 17-ஆம் தேதி, கிழக்கு உக்ரைனில் ஏவுகணையாள் சுட்டு வீழ்த்தப்பட்டு வானிலேயே வெடித்து சிதறியது மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் அதிலிருந்த 298 பேரும் பலியானதாகவும் தொடக்கக்கட்ட விசாரணை அறிக்கையில் தெரியவந்துள்ளது. MH17 விமானத்தை சுட்டு வீழ்த்தியவர்கள் நீதியின் முன் நிறுத்தப்படுவது உறுதி செய்யப்படும் என பிரதமர் டத்தோ ஶ்ரீ நஜிப் துன் ரசாக் தெரிவித்தார்.

உக்ரைன் எல்லையில் தொடர் தாக்குதல் நிகழ்வதால் MH17 விமான விபத்து நிகழ்ந்த பகுதியை அணுக தடையாக உள்ளதாகவும் பிரதமர் சுட்டிக்காட்டினார். ரஷ்யா அரசாங்கத்திற்கும் உக்ரைன் கிளர்ச்சிக்காரர்களுக்கும் இடையே ஏற்பட்டிருக்கும் பிரிவினையைத் தொடர்ந்து, தற்போது விசாரணைக்காக விபத்து நடந்த இடத்தில் நடவடிக்கை மேற்கொள்ளும் முக்கிய குழுவிற்கு முறையான பாதுகாப்பு வழங்கப்பட வேண்டுமென பிரதமர் நஜிப் மற்றும் ரஷ்யா அதிபர் விளாடிமிர் புடின் உறுதி அளித்துள்ளனர்.