MH17:பால் ராஜசிங்கம், மேபல் அந்தோணிசாமி உடல்கள் அடக்கம் செய்யப்பட்டன

MH17:பால் ராஜசிங்கம், மேபல் அந்தோணிசாமி உடல்கள் அடக்கம் செய்யப்பட்டன

MALAYSIA-RUSSIA-UKRAINE-CRISIS-AVIATION-REMAINS

கடந்த வெள்ளிக்கிழமை தாயகம் கொண்டு வரப்பட்ட MH17 விமானப் பேரிடரில் பலியான 20 பேரில், தம்பந்தியரான பால் ராஜ சிங்கம் சிவஞானம், மற்றும் மேபல் அந்தோணிசாமி சூசை ஆகியோரின் இறுதிச் சடங்கு நேற்று பிரிக்பீல்ட்சில் அமைந்துள்ள லேடி பாத்திமா தேவாலயத்தில் உறவினர்கள், நண்பர்களின் கண்ணீர் அஞ்சலியுடன் நடைபெற்றது. அவ்விமானத்தில் பயணம் செய்த இவர்களது 10 வயது மகன் மாத்தியு எசக்கியல் குறித்து இதுவரை எந்தவொரு தகவலும் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த இறுதிச் சடங்கிற்குப் பிறகு பால் ராஜசிங்கத்தின், மற்றும் மேபல், ஆகியோரின் உடல்கள் செராஸ் மின் சுடலைக்குக் கொண்டு செல்லப்பட்டது.