7 ஆண்டுக்குப் பிறகு நீதி கிடைத்துள்ளது: சைஃபுல் புகாரி

7 ஆண்டுக்குப் பிறகு நீதி கிடைத்துள்ளது: சைஃபுல் புகாரி

Anwar-dan-Saifu

பிப்ரவரி 11, டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம்மின் உதவியாளர் முகமது சைஃபுல் புகாரி அஸ்லான் 7 ஆண்டுக்குப் பிறகு தமக்கு நீதி கிடைத்திருப்பதாகக் கூறியுள்ளார். கடந்த 2008-ஆம் ஆண்டு டாமான்சாராவில் அமைந்துள்ள ஓர் அடுக்குமாடி குடியிருப்பில், டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தம்மை ஓரினப் புணர்ச்சியில் ஈடுபடுத்தியதாக அவரது உதவியாளரான சைஃபுல் புகாரி காவல் நிலையத்தில் புகார் செய்தார். இதனையடுத்து, டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. கடந்த ஏழு ஆண்டுகளாக நீடித்த இவ்வழக்கில் நேற்று டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிமுக்குக் கூட்டரசு நீதிமன்றம் 5 ஆண்டுகள் சிறைதண்டனை வழங்கியது.