ஷாகுல் ஹமீட்டின் மன்னிப்பு ஏற்கப்படாது – C.சிவராஜ்

ஷாகுல் ஹமீட்டின் மன்னிப்பு ஏற்கப்படாது - C.சிவராஜ்

Sivaraj

உஸ்தாத் ஷாகுல் ஹமீட்டின் மன்னிப்பு விவகாரம் குறித்து ம இ கா வின் தேசிய இளைஞர் பிரிவு தலைவர் திரு. C.சிவராஜ் அவர்கள் 04/08/2014 அன்று பத்திரிக்கையாளர்களை சந்தித்து ம இ கா இளைஞர் பிரிவின் நிலை குறித்து விளக்கமளித்தார்.

ம இ காவின் இளைஜர் பிரிவு ஹாகுல் ஹமீட்டின் மன்னிப்பை ஏற்றுக்குண்டதாக சில ஊடகங்கள் வெளியிட்டிருந்த செய்திகளுக்கு மறுப்பு தெரிவித்த திரு. C. சிவராஜ், நாங்கள் ஷாகுல் ஹமீட்டின் மன்னிப்பை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்றும் அவர்மீது தக்க சட்ட நடவடிக்கை எடுக்கும்வரை ஓயமாட்டோம் என்றும் தெரிவித்தார். இன மத கலவரத்தை தூண்டுகின்ற இது போன்ற அறிக்கைகளை காணொளி களுக்கு எதிராக காவல் துறையும் தேசிய வழக்கறிஞர் மன்றமும் தகுந்த நடவடிக்க எடுப்பதை உறுதிபடுத்துவேன் என்றும் அவர் கூறினார். மேலும் தேசிய முன்னனியின் கூட்டணி கட்சிகளின் இளைஞர் பிரிவு தலைவர்களிடம் இவ்விவரம் குறித்து ஆலோசனை செய்யப்படும் என்றும் திரு. C. சிவராஜ் அறிவித்தார்.

05/08/2014 அன்று காலை 09.00 மணியளவில் சைபர் ஜெயாவில் SKMM இடம் இது சம்பந்தமாக கோரிக்கை மனு அளிக்க உள்ளதாகவும் அறிவித்தனர்.  கோரிக்கை மனு அளிக்கும் நிகழ்வில் தேசிய முன்னனியின் இளைஞர் பிரிவு துணைத் தலைவர் திரு. கைருள் அஸ்வானும் கலந்து கொள்கிறார்.