வெள்ளத்தால் அவதியுறும் மக்களுக்கு இளைஞர் பிரிவின் உதவியல் கைக்கொடுக்க பொதுமக்களுக்கு அழைப்பு

வெள்ளத்தால் அவதியுறும் மக்களுக்கு இளைஞர் பிரிவின் உதவியல் கைக்கொடுக்க பொதுமக்களுக்கு அழைப்பு

sivaraj1

டிசம்பர் 29, தற்பொழுது நாடு முழுவதும் நிகழ்ந்து வரும் கடுமையான வெள்ளத்தால் பாதிக்கப்படும் மக்களுக்கு உதவும் பொருட்டு தேசிய ம.இ.கா இளைஞர் பிரிவின் தலைவர் சகோதரர் சிவராஜ் சந்திரனின் தலைமையில், ம.இ.கா இளைஞர் பிரிவினர் நாடு முழுவதும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்டும் அங்குள்ள மக்களுக்கு முடிந்தவரை உதவியும் வருகின்றனர்.

ஆனால் பாதிக்கப்பட்ட மக்களின் தொகை அதிகமென்பதால் பொதுமக்களிடமிருந்து தேவையான பொருட்களை நன்கொடையாக வசுலிக்க முடிவு செய்துள்ளோம். உடமைகளை இழந்து வெள்ளத்தால் அவதியுறும் மக்களுக்கு, பொதுமக்கள் அவர்களால் இயன்ற பொருட்களை வழங்கினால் நாங்கள் இளைஞர் பிரிவினர் அதனை சேகரித்து பின்பு பாதிக்கப்பட்ட இடங்களுக்கு கொண்டு போய் சேர்ப்போம். நாங்கள் பொதுமக்களிடமிருந்து கிழியாத அணியக்கூடிய ஆடைகள், நீர் பாட்டல்கள், maggie, பதப்படுத்தப்பட்ட உணவுகள் pampersஅவசரக் காலத்தில் பெண்கள் பயன்படுத்தக்கூடிய உடைகள், போன்றவற்றை சேகரித்து வருகிறோம். ஆக பொதுமக்கள் தயவுகூர்ந்து அவதியுறும் மக்களின் நிலையை நினைவுக்கூர்ந்து எங்களுடன் கைக்கோர்த்து உதவுவார்கள் என நம்புகிறோம்.

பொதுமக்கள் நேரடியாக ஜாலான் ஈப்போவில் அமைந்திருக்கும் எங்களது ம.இ.கா இளைஞர் பிரிவின் தலைமையகத்திற்கு வந்து பொருட்களை வழங்கலாம். அதுமட்டுகின்றி ஒவ்வொரு மாஎஇலங்களிலும் ம.இ.கா இளைஞர் பிரிவுனர் உதவிப் பொருட்களை சேகரித்து வருகின்றனர். அவர்களைத் தொடர்புக்கொண்டும் மக்கள் அவர்களால் இயன்றதை வழங்கலாம். மேல் விபரங்களுக்கு சுந்தர் 016-2192640 அல்லது வினோட் 010-2653911 தொடர்புக்கொள்ளவும் நன்றி