வெள்ளத்தால் அவதியுறும் சுங்கை சிப்புட் மக்களுக்கு ம.இ.கா இளைஞர் பிரிவு உதவிக் கரம் நீட்டியது

வெள்ளத்தால் அவதியுறும் சுங்கை சிப்புட் மக்களுக்கு ம.இ.கா இளைஞர் பிரிவு உதவிக் கரம் நீட்டியது

Sivaraj1 (2)

டிசம்பர் 30, தற்பொழுது நாடு முழுவதும் நிகழ்ந்து வரும் கடுமையான வெள்ளத்தால் பாதிக்கப்படும் மக்களுக்கு உதவும் பொருட்டு தேசிய ம.இ.கா இளைஞர் பிரிவின் தலைவர் சகோதரர் சிவராஜ் சந்திரனின் தலைமையில், ம.இ.க இளைஞர் நாடு முழுவதும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்டும் அங்குள்ள மக்களுக்கு முடிந்தவரை உதவியும் வருகின்றனர். இன்னோரு பிரிவினர் தேசிய ம.இ.கா இளைஞர் பிரிவின் செயலாளர் அர்விந் கிருஷ்ணன் தலைமையில் சுங்கை சிப்புட், பேராவில் வெள்ளத்தால் அவதியுறும் மக்களுக்கு உதவிக்கரம் நீட்டினர்.

தேசிய ம.இ.கா இளைஞர் அணியும், பேரா, பினாங்கு, கெடா மாநில ம.இ.கா இளைஞர் அணியையும் பிரதிநிதித்து 30க்கும் மேற்பட்டோர் இந்த பணிக்படைக் குழுவில் இணைந்து சேவை செய்தனர். உணவு பண்டங்களை எடுத்து வருவதிலும் அத்தியாவசிய பொருட்களை தேவையான இடங்களுக்கு அனுப்பவதிலும் இளைஞர் பிரிவினர ஒரு நாள் முழுவதும் லிந்தாங் தொகுதியிலுள்ள தேசிய வகை லசாக் பள்ளியில் வேலை செய்தனர்.

இச்சேவை இத்தோடு நிற்காமல் உதவி தேவைப்படும் அனைத்து இடங்களிலும் ம.இ.கா இளைஞர் பிரிவினர் தயங்காமல் களமிறங்குவோம் எனவும் இதில் மதம் இனம் வேறுபாடின்றி மக்களின் துயர்துடைப்பதே எங்களது நோக்கம் என தேசிய ம.இ.கா இளைஞர் பிரிவின் செயலாளர் சகோதரர் அர்விந் கிருஷ்ணன் கூறினார்.