வதந்திகளை பரப்ப வேண்டாம் – சிவராஜ் சந்திரன் வேண்டுகோள்

வதந்திகளை பரப்ப வேண்டாம் - சிவராஜ் சந்திரன் வேண்டுகோள்

MalekaFakeNews

வர்த்தக நிறுவனங்கள் பெயர் பலகையில் தமிழ் எழுத்துக்கள் இடம்பெற்றிருந்தால் அதை நீக்க வேண்டும் என மலாக்கா நகராண்மை கழகம் உத்தரவு பிறப்பித்துள்ளதாக இணையத்திலும் சமூக வலைதளங்களிலும் தவறாக செய்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. இந்த தகவல் முற்றிலும் தவறானது என மலாக்கா மாநில நிர்வாக குழு உறுப்பினர்(EXCO) மற்றும் மலாகா மாநில மஇகா தலைவர் டத்தோ S. மகாதேவன் உறுதிபடுத்தினார். இந்த தகவலை மஇகா தேசிய இளைஞர் பிரிவின் தலைவர் திரு. சிவராஜ் சந்திரன் சமூகவலைதளான தமது முகநூல் பக்கத்தில் அறிவித்திருக்கிறார். இதுபோன்ற தவறான செய்திகளை பரப்ப வேண்டாம் எனவும் சிவராஜ் சந்திரன் கேட்டுக் கொண்டுள்ளார்.