யுபிஎஸ்ஆரில் நமது மாணவர்கள் தேர்ச்சி விகிதம் உயர்வு

யுபிஎஸ்ஆரில் நமது மாணவர்கள் தேர்ச்சி விகிதம் உயர்வு

516-370x290

நவம்பர் 27, கடந்த ஆண்டு 50 சதவிகிதத் தேர்ச்சி பெற்ற கெடா பாடாங் செராய், விக்டோரியா தோட்டத் தமிழ்ப்பள்ளி, இவ்வாண்டு யு.பி.எஸ்,ஆர் தேர்வில் 57.14 சதவிகிதம் பெற்று சாதனை படைத்துள்ளது. மொத்தம் 56 மாணவர்கள் கொண்ட இப்பள்ளியில், 32மாணவர்கள் முழு தேர்ச்சி பெற்றுள்ளனர். அடுத்த ஆண்டு தேர்ச்சி விகிதம் உயர்வடையப் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களின் ஒத்துழைப்புடன் பல்வேறு நடவடிக்கைளை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளதாக பள்ளியின் தலைமை ஆசிரியர் அசோக்குமார் கூறினார்.

மாணவர்கள் தேர்ச்சி விகிதம் உயர, ஆசிரியர்கள் எல்லா வகையிலும் துணை நிற்பதாக அவர் மேலும் கூறினார். இவ்வாண்டு யு.பி.எஸ்.ஆரில் ராதிகா குணசேகரன், துவேந்தர் சண்முகம் அகிய இருவரும் 7ஏ பெற்று சாதனை படைத்துள்ளனர்.