நேற்று நாடளாவிய நிலையில் MH 17 விமானப் பேரிடரில் பலியான 20 பயணிகளுக்கு தேசிய அளவிலான துக்கம் அனுசரிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து எதிர்பாரா மரணத்தைத் தழுவிய அவர்களுக்கு ஒரு நிமிட மெளன அஞ்சலிமாறு அமைச்சுகள், அரசு நிறுவனங்கள், ஊடகங்கள், மற்றும் பொதுமக்களையும் அரசாங்கம் கேட்டுக்கொண்டது. குறிப்பாக ஊடகங்கள் சோகமான கீதங்களையும், பிரார்த்தனைகளையும் மட்டுமே ஒளிபரப்ப வேண்டும் என கட்டளையிடப்பட்டது. எனினும், இக்கட்டளையை நேற்று இரண்டு வானொலி நிலையங்கள் பின்பற்றவில்லை என தகவல் தொடர்பு மற்றும் பல்லூடகத் துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ அஹ்மாட் ஷபரி சீக் தெரிவித்தார்.