குளறுபடியான மரபணுவைத்தவிர அன்வாருக்கு எதிராக எந்த சாட்சியமும் இல்லை

குளறுபடியான மரபணுவைத்தவிர அன்வாருக்கு எதிராக எந்த சாட்சியமும் இல்லை

anwar

அக்டோபர் 31, முரண்பாடுகள் நிறைந்த மரபணுவைத் தவிர வேறு எந்த சாட்சியமும் இல்லாத நிலையில், அன்வாருக்கெதிரான குற்றச்சாட்டு சட்டப்படி தள்ளுபடி செய்யப்பட வேண்டும் என ராம்கர்ப்பால் சிங் ஆணித்தரமாக வாதிட்டார்.

மேல்முறையீட்டு நீதிமன்றம் அன்வரை குற்றவாளியென தீர்ப்பளிக்க ஏற்று கொண்ட ஒரே சட்சியான மரபணு பரிசோதனை முடிவுகளில் பல முரண்பாடுகளும் சந்தேகத்திற்குரிய கூறுகளும் உள்ளதால் அதை ஒரு குற்ற வழக்கில் ஒரு சாட்சியமாக ஏற்று கொள்ளக்கூடாது என்று அன்வாரின் மரபணு சோதனை சம்பந்தப்பட்ட விவகாரங்கள் பற்றி தமது வாதத்தை முன் வைத்த ராம்கர்ப்பால் கூறினார்.