மீனவர்கள் மீது இலங்கை படை தாக்குதல்

மீனவர்கள் மீது இலங்கை படை தாக்குதல்

5

கச்சத்தீவு அருகே ஞாயிறன்று இராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தினர். 50 படகுகளையும் அவர்கள் சேதப்படுத்தினர். அதுமட்டுமின்றி 4 மீனவர்களை கைது செய்து காங்கேசன் துறைக்கு கொண்டு சென்றனர். இத்தாக்குதலில் தப்பித்து கரைசேர்ந்த மீனவரான எடிசன் என்பவர், இலங்கை கடற் படையினரின் தாக்குதல் மற்றும் கைது குறித்து கடலோர பாதுகாப்புப்படை காவலர்களிடம் புகார் செய்தார். இதனிடையே, இந்திய எல்லைக்குள் புகுந்து மீனவரின் படகுகளை சேதப்படுத்தியதாக இலங்கை கடற்படை மீது இந்திய கடலோரப் படை வழக்குப்பதிவு செய்துள்ளது.