மாணவர்களுக்கு அளித்த வாக்குறுதியை மாரா மீறியது

மாணவர்களுக்கு அளித்த வாக்குறுதியை மாரா மீறியது

Rafizi-Ramli

ஜூலை 16, மாரா எனும் மஜ்லிஸ் அமானா ராக்யாட், தான் அளித்த வாக்குறுதிபடி 31 இளங்கலை பட்டம் பெற்ற மாணவர்கள் தங்கள் மருத்துவக் கல்வியை பிரிட்டனிலும், அயர்லாந்திலும் மேற்கொள்ள உபகாரச் சம்பளம் வழங்க இயலாது என கூறியது.

அதற்கு பதிலாக மாணவர்கள் இந்தியா, இந்தோனேசியா மற்றும் மலேசியாவில் மருத்துவக்கல்வியை மேற்கொள்ளும்படி கூறி இருக்கிறது. இந்த தகவல் தொடர்பாக மாணவர்களின் பெற்றோர் தம்மிடம் புகார் கூறியதாக பி.கே.ஆர் தலைமை செயலாளர் ரபிஸி ரம்லி கண்டனம் தெரிவித்துள்ளார்.