மலேசிய கபடி அணிகள் சென்னை செல்கிறது

மலேசிய கபடி அணிகள் சென்னை செல்கிறது

DSC01939

ஆசிய விளையாட்டு போட்டி தென் கொரியாவில் உள்ள இன்சியோன் நகரில் செப்டம்பர் 19-ந் தேதி தொடங்குகிறது. இந்த போட்டியில் பங்கேற்கும் மலேசிய ஆண்கள் மற்றும் பெண்கள் கபடி அணி பயிற்சி ஆட்டத்தில் விளையாடுவதற்காக இன்று அதிகாலை விமானம் மூலம் சென்னை செல்கிறது.

இன்றும், நாளையும் காஞ்சீபுரம் மாவட்டம் அனகாபுத்தூரில் நடைபெறும் அகில இந்திய கபடி போட்டியில் மலேசிய அணிகள் காட்சி போட்டியில் விளையாடுகிறது. இதைத்தொடர்ந்து தமிழகத்தில் உள்ள முன்னணி அணிகளுடன் மலேசிய அணி மோதும் வகையில் பயிற்சி ஆட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.