மலாய் மொழியை பாதுகாக்க வேண்டும்: துணை பிரதமர்

மலாய் மொழியை பாதுகாக்க வேண்டும்: துணை பிரதமர்

banners-IMG_8892.storyimage_459235831

நவம்பர் 12, மலாய் மொழி என்பது அறிவை வளர்க்கும் ஒரு சிறந்த மொழியாக கருதப்படுவதால் ஆங்கில மொழியை வளர்க்கும் அதே நேரத்தில் மலாய் மொழியையும் பின்தங்கி விடாமல் பாதுகாக்க வேண்டும் என துணை பிரதமர் தான் ஸ்ரீ முஹிடின் யாசின் கூறியுள்ளார்.
கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களை மீண்டும் மலாய் மொழியில் கற்பிக்க வேண்டும் என்று அரசாங்கம் எடுத்திருக்கும் முடிவையொட்டி தமது கருத்தை வெளிப்படுத்தினார் முஹிடின் யாசின்.