மஇகாவில் மறுதேர்தல் நடத்துவதே சிறந்தது: பி.கமலநாதன்

மஇகாவில் மறுதேர்தல் நடத்துவதே சிறந்தது: பி.கமலநாதன்

kamala

ஜனவரி 29, மஇகாவில் நிலவி வரும் பிரச்சனைகளுக்கு தீர்வுக் காண அனைத்து பதவிகளுக்கும் மறுதேர்தல் நடத்துவதே சிறந்தது என்று துணை கல்வியமைச்சர் பி.கமலநாதன் தெரிவித்துள்ளார்.

சொந்த கட்சியின் நிர்வாகிகளே கட்சி தலைமையகத்திற்குள் செல்ல அனுமதிக்கப்படாதது அதிர்ச்சியை ஏற்படுத்தியது என்று பி.கமலநாதன் தெரிவித்தார்.

இந்த நிலையில் மஇகாவின் தேசியத் தலைவர் டத்தோ ஜி.பழனிவேல் மற்றும் துணைத்தலைவர் டாக்டர் எஸ்.சுப்ரமணியம் ஆகிய இருவரும் இப்பிரச்சினைக்குரிய தீர்வைக் காண வேண்டும் துணை கல்வியமைச்சர் பி.கமலநாதன் வலியுறுத்தினார்.