பைபிள்களை ஒப்படைத்தது நல்ல முடிவு

பைபிள்களை ஒப்படைத்தது நல்ல முடிவு

bible3

நவம்பர் 15, பறிமுதல் செய்யப்பட்ட பைபிள்களை இஸ்லாமிய இலாகா மீண்டும் மலேசிய பைபிள் அமைப்பினரிடம் ஒப்படைத்தது வரவேற்கப்படக்கூடிய முடிவு என ம.சீ.ச. சமய பிரிவு தலைவர் டத்தோ ஸ்ரீ தி லியான் கெர் கருத்து தெரிவித்துள்ளார்.
பைபிள்களை ஒப்படைக்க வேண்டும் என்ற முடிவு முன்னதாகவே எடுத்திருக்க வேண்டும் என்றும் இஸ்லாமிய மத சார்பான சட்டதிட்டங்கள் மற்ற மதத்தினரிடமும் அமல்படுத்துவது ஆரோக்கியமற்றதல்ல எனவும் தி லியான் கூறினார்.
இதனிடையே, இம்மாதிரியான மத சார்பான கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் மலேசிய மக்களின் சமாதனத்தை குலைக்கும் படியான நடவடிக்கைகள் எடுக்கப்படக்கூடாது என்று தி லியான் மேலும் கூறினார்.