பேராக் மாநில ம.இ.கா தொடர்புக்குழு தலைவராக பொறுபேற்கிறார் டத்தோ ஶ்ரீ ஜி.பழனிவேல்

பேராக் மாநில ம.இ.கா தொடர்புக்குழு தலைவராக பொறுபேற்கிறார் டத்தோ ஶ்ரீ ஜி.பழனிவேல்

Palanivel

ம.இ.கா தேசியத் தலைவர் டத்தோ ஶ்ரீ ஜி.பழனிவேல், பேராக் மாநில ம.இ.கா தொடர்புக்குழு தலைவராக தாமே பொறுப்பேற்கவுள்ளதாக அறிவித்துள்ளார்.

பேராளர் மாநாட்டில் ஒரே கூச்சல் குழப்பமாக இருந்தது. யார் என்ன பேசினார்கள் என்றே தெரியவில்லை என அண்மையில் பேரா மாநில பேராளர் மாநாட்டில் தாம் கலந்துகொண்ட போது நிகழ்ந்த சம்பவத்தை டத்தோ ஶ்ரீ ஜி.பழனிவேல் சுட்டிக்காட்டிப் பேசினார்.

நான் மாநில ம.இ.கா தொடர்புக்குழு தலைவராகப் பொறுப்பேற்றப் பின் மாநில அளவிலான கூட்டங்களையும், தொகுதி மற்றும் கிளைத் தலைவர்களுக்கிடையே அடிக்கடி சந்திப்புக் கூட்டங்களை நடத்தவிருப்பதாகவும் தெரிவித்தார்.

பின்னர், கட்சியில் சட்டவிதிகளில் படி சில திருத்தங்கள் கொண்டுவரப்படும் என்று இயற்கை வளம் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சருமான டத்தோ ஶ்ரீ ஜி.பழனிவேல் தெரிவித்தார்.