பெரு நாட்டில் 4.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்.

பெரு நாட்டில் 4.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்.

1

பெரு நாட்டின் அண்டியனில் நேற்று நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தில் வீடுகள் இடிந்தது. இதில் கட்டிட இடுபாடுகளில் சிக்கி ஏழு பேர் பலியானதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர். பருரோ பகுதியிலும் நிலநடுக்கத்தால் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. நிலப்பரப்பில் இருந்து ஐந்து மைல் தொலைவில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக தனது வலைதளத்தில் அது கூறியுள்ளது. இதன் காரணமாக 15 வீடுகள் இடிந்ததுடன் 75 பேர் தங்கள் வீடுகளை இழந்துள்ளனர்.