பிரதமர் நஜிப் எதிராக போராட்டம் வலுக்கிறது

பிரதமர் நஜிப் எதிராக போராட்டம் வலுக்கிறது

yello

ஆகஸ்டு 31, மலேசிய பிரதமர் ஊழல் குற்றச்சாட்டிற்கு ஆளாகியுள்ள நிலையில் தலைநகரில் இரண்டாவது நாளாக நேற்றும் போராட்டம் நடைப்பெற்றது.

பிரதமர் நஜிப் ரஸாக்கின் தனிப்பட்ட வங்கிக் கணக்கில் பலநூறு மில்லியன் டாலர் பணம் இருப்பது தெரியவந்தது. ஆனால் அவர் தனது வங்கிக் கணக்கில் இருப்பது நன்கொடைப் பணம் என்றும் தான் எந்த குற்றமும் செய்யவில்லை என்று நஜிப் கூறிவருகிறார். அவரரை பதவி விலகும்படி வற்புறுத்தி கோலாலம்பூரில் ஆயிரக்கணக்கான மக்கள் இரண்டு நாட்களாக போராட்டம் நடத்தினர். போராட்டக்காரர்கள் தங்கள் எதிர்ப்பை தெரிவிக்கும் பொருட்டு மஞ்சள் நிற உடை அணிந்து மக்கள் போராடினார்கள்.