பினாங்கு புலாவ் கெண்டியில் ஒரு பெண்ணின் சடலம் கொடூரமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

பினாங்கு புலாவ் கெண்டியில் ஒரு பெண்ணின் சடலம் கொடூரமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

det

நவம்பர் 8, கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் பினாங்கு புலாவ் கெண்டியில் தலையில்லா பெண்ணின் உடல் கடலில் மிதக்க கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் தற்போது, மேலும் ஒரு பெண்ணின் சடலம் மிகவும் கொடூரமாக கொலை செய்யப்பட்ட நிலையில் பயணப்பெட்டியினுள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டவர் என நம்பப்படும் கொலை செய்யப்பட்ட பெண்ணின் நல்லுடல் தலை மற்றும் கால் இல்லாமல் காணப்பட்டது. அப்பெண்ணின் உடலும், கைகளும் ஒரு பயணப்பெட்டியில் வைக்கப்பட்டு, இங்கு ஜாலான் கெபுன் பூங்கா அருகே கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும், கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலம் போர்வையால் சுற்றப்பட்டிருந்ததாக பினாங்கு காவல்த்துறை துணை கமிஷனர் அப்துல் ரஹிம் ஹானாஃபி தெரிவித்தார்.

இச்சம்பவம் இவ்வாண்டிலேயே நிகழ்ந்த மிகவும் மோசமான விபத்தாக வர்ணிக்கப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.