பதவி விலகினார்:ரோட்சியா

பதவி விலகினார்:ரோட்சியா

download (3)

நேற்று முன் தினம் மாலை, மந்திரி புசார் டான் ஶ்ரீ காலிட் இப்ராஹிம் சிலாங்கூர் ஆட்சிக்குழுவிலிருந்து பதவி நீக்கம்செய்வதாக அறிவித்த ஆறு பேரில் விடுபட்டவர் ரோட்சியா இஸ்மாயில். பதவி நீக்க அறிவிப்பின் போது, அவர் வெளிநாட்டில் இருந்ததால் அவர் தாயகம் திரும்பியவுடன், அவரிடம் பேசிய பிறகு முடிவு செய்யப்படும் என டான் ஶ்ரீ காலிட் இப்ராஹிம் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் அரசியல் பயிற்சித் திட்டம் ஒன்றில் கலந்து கொள்வதற்காக பேங்காக் சென்றிருந்த ரோட்சியா நாடு திரும்பியதையடுத்து, தாம் காலிட்டு ஆதரவு தெரிவிக்கக் கூடாது என்ற பி.கே.ஆரின் முடிவுக்குக் கட்டுப்படுவதாக அறிவித்த ரோட்சியா, ஆட்சிக்குழுவிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.