பதவி விலகினர்: MRTகார்ப் தலைமைச் செயல் முறை அதிகாரி

பதவி விலகினர்: MRTகார்ப் தலைமைச் செயல் முறை அதிகாரி

SDMRTC061113

நேற்றிரவு கோத்தா டாமான்சாராவில் எம்.ஆர்.டி நிர்மாணிப்புப் பகுதியில் கான்கிரிட் சுவர் இடிந்து விழுந்து மூவர் பலியானதையடுத்து, MRT Corp நிறுவனத்தின் தலைமை செயல்முறை அதிகாரி டத்தோ அசார் அப்துல் ஹமிட் பதவி விலகியுள்ளார்.

‘நேற்றிலிருந்து நான் தலைமைச் செயல்முறை அதிகாரி இல்லை’ என டத்தோ அசார் அப்துல் ஹமிட் இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.

என்னால் இயன்றவரை செய்துவிட்டேன். ஆனால் என் பொறுப்புகளை கவனிப்பதில் தவறிவிட்டேன் என டத்தோ அசார் அப்துல் ஹமிட் தெரிவித்தார்.