நைஜீரியாவில் தீவிரவாதிகள் தாக்குதல்

நைஜீரியாவில் தீவிரவாதிகள் தாக்குதல்

terrorist1

ஏப்ரல் 6, நைஜீரியாவில், மார்க்கெட்டில் புகுந்த தீவிரவாதிகள் அங்கிருந்த வியாபாரிகள் 4 பேரை சுட்டுக் கொன்றுவிட்டு பொருட்களை கொள்ளையடித்து சென்றனர். நைஜீரியாவில் போகோ ஹரம் தீவிரவாதிகள், அரசுக்கு எதிராக செயல்பட்டு வருகின்றனர். தீவிரவாதிகளின் தாக்குதலில் பொதுமக்கள் ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர். தீவிரவாதிகளை ஒடுக்க அந்நாட்டு அரசு தீவிர நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது.

இதில் 4 வியாபாரிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். வியாபாரிகள் மீது துப்பாகி சூடு நடத்திய தீவிரவாதிகள், அங்கிருந்த உணவுப்பொருட்களை அள்ளி சென்றனர்.
தகவலறிந்து அந்நாட்டு பாதுகாப்பு படையினர் வருவதற்குள் தீவிரவாதிகள் தப்பிவிட்டனர்.