நேபாள நிலநடுக்கம் பலி எண்ணிக்கை 5057-ஆக உயர்ந்தது

நேபாள நிலநடுக்கம் பலி எண்ணிக்கை 5057-ஆக உயர்ந்தது

Earthquake

ஏப்ரல் 29, நேபாளத்தை சனிக்கிழமை தாக்கிய 7.9 ரிக்டர் அளவிலான மோசமான நிலநடுக்கப் பேரழிவில் பலியானோர் எண்ணிக்கை 5057-ஆக உயர்ந்துள்ளது. மேலும் 8000 பேர் படுகாயமடைந்துள்ளனர். 80 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடுமையான நிலநடுக்கத்தை சந்தித்த நேபாளத்தில் நேற்று மட்டும் தொடர்ந்து 16 முறை நிலநடுக்கம் உலுக்கியதில் பல்லாயிரம் வீடுகள் இடிந்து விழுந்து தரைமட்டமாகின.