நெருக்கடியை சந்தித்து வரும் மலேசியன் ஏர்லைன்ஸ் நிலைமையை சமாளிக்க புதிய திட்டம்: கடும் எதிர்ப்பு

நெருக்கடியை சந்தித்து வரும் மலேசியன் ஏர்லைன்ஸ் நிலைமையை சமாளிக்க புதிய திட்டம்: கடும் எதிர்ப்பு

malaysia-airline-31

கடந்த 9 மாதங்களில் இரண்டு விமானப் பேரிடர்களை எதிர்கொண்டுள்ள மலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவனம், பல்வேறு விமர்சனங்களைச் சந்தித்து வருகிறது.

நிலைமையை சமாளிக்க என் அல்டிமேட் பக்கெட் பட்டியல் எனும் போட்டியை அறிமுகம் செய்தது மலேசியன் ஏர்லைன்ஸ். பக்கெட் லிஸ்ட் என்பது இறப்பதற்கு முன் என்பதைக் குறிக்கிறது. இந்த போட்டியின் விதிமுறைப்படி, இறப்பதற்குள் நீங்கள் செய்ய விரும்பும், பார்க்க விரும்பும், அடையவிரும்புவனவற்றை 500 சொற்களுக்குள் எழுதி அனுப்பவேண்டும். வெற்றி பெறுபவர்களுக்கு ஒரு இலவச ஐபேட்டும், மலேசியாவில் உள்ளூர் பயணத்திற்கான ஒரு இலவச பயணச் சீட்டும் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
போட்டியை கண்ட பலர் மலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு எதிராகக் கடுமையான விமர்சனங்களை வெளியிட்டுள்ளனர். அதன் காரணமாக போட்டியை மலேசியன் ஏர்லைன்ஸ் நிறுத்திவைத்துள்ளது.